...

10 views

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
இன்பத்தை கூட்டி
துன்பத்தை கழித்து
அன்பினைப் பெருக்கிய
என் ஆசிரியர்களுக்கு வணக்கங்கள் !

தினம் பூக்கும்
மலர்களை போல
உற்சாகமாய் பட்டை தீட்டும்
நீங்கள் - மாலையில் கூட
சோர்ந்து விடுவதில்லை
சூரியகாந்தி போல


கரும்பலகையின் மீது
வெண்ணிற எழுத்துக்களால்
வண்ணமயமான வாழ்க்கையை
எங்களுக்கு அளித்த வாழும் தெய்வங்கள் !

வெற்றி எனும் கொடியை
பிடிக்க ஏறுகிறேன்
அதை அழகாய் பறிக்க
கற்றுத்தந்த அற்புதம் நீர் !


எத்திசையும் அறியாத எனை
எட்திசையும் அறிய வைத்தாய் ;
உன் அறிவை தந்தாய்
உன் மொழியை தந்தாய் ;


என் குறையை
நான் அறியாது
அதை அழித்த
அறிவின் அழகே…!

வாழ்வில் ஏறியவன் எங்கோ
மேலேயிருக்க - ஏற்றிவிட்ட
ஏணி மட்டும்
அதேயிடத்தில் அடுத்தவனை
ஏற்றிவிட காத்திருக்கிறது !!!

உங்கள் பிரிவு என்றும்
ஆறாத ரணம் தான்
எங்கள் வாழ்வில்

இப்படிக்கு ,
உங்கள் மாணவனாய்……..!!!

© மோ.கோகுல் ஆனந்த்