...

5 views

அனுபவங்கள்
சிறப்பான பல அனுபவங்கள் எங்களை இன்னொரு வழியில் மீள எடுத்து செல்லும். எங்களோட அறிவு சிந்தனைகள் எல்லாத்தையும் தாண்டி எங்களை நாங்க முன்னேற்றிக் கொள்ள இந்த அனுபவங்கள் ரொம்ப முக்கியம். என்னைப் பொறுத்த வரைக்கும் எனக்கும் எந்தவொரு அனுபவமும் பெரிதாய் இருந்ததில்லை இதுவரையில் சில சந்தர்ப்பங்களை கூட தவற விட்டிருக்கன் பயத்தினால, ஆனால் இப்ப எல்லாம் ஏதோ புதிசா கொஞ்சம் மாறி இருக்கிற போல ஒரு உணர்வு எனக்கு இருக்குது. பயமும் எனக்கு இருக்காம இல்லை. ஒரு அருகில் இருக்கிற இடத்துக்கு தனியாய் போவது கூட பயம் தான். ஆனால் போய் பழக்கமான இடம் எவ்வளவு தூரம் ஆனாலும் தனியாய் போற அளவுக்கு முன்னேறிட்டன்.இதுவும் ஒரு அனுபவம் தான் இல்லையா?. புதிதாய் ஒரு இடத்திற்கு தனியாய் பயணித்து பாதைகளை கண்டறிந்து சரியான ஒரு இடத்துக்கு போறது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஏனோ தெரியேல்ல அது எனக்கு ஒரு சந்தோசத்தை கொடுக்குது. அந்த பயணங்களில எல்லாம் பயம் என்னோட பக்கத்தில கூட நிற்காது. அப்ப அப்போ வருவதும் போவதுமாய் என்னோட வாழ்க்கைல இருக்குது. இதை எப்ப என்னால கடந்து போக முடியுதோ அப்ப எல்லாம் என்னால தைரியத்தை உணர முடியுது.
மனம் தான் எல்லாத்தையும் முடிவெடுக்குது. எல்லாமே செய்ய என்னாலையும் முடியும். சந்தர்ப்பங்களை நான் தேடிப் போகேல்ல. அது கிடைக்கும் போது நிச்சயம் என்னோட பெரிய அளவிலான திறமையை அதில முதலீடு செய்து கொள்ளுவன். அது வரைக்கும் அனுபவங்களை எடுத்துக் கொள்ளுவோம். மிகப் பெரிய பாடங்களை இந்த அனுபவங்கள் எங்களுக்கு தரும்.....

© kavi Seelan