...

13 views

பார்க்கும் நொடி..இன்னும் நீளவேண்டுமடி..
தேடித்தேடி பார்த்தபின்பும்
தென்படவில்லை வானில்
தேய்நிலவும் தூரமுமாய்
தேடலும் தொடர்கதையாய்..

தென்றலும் திவ்வியமாய்
தேடுபவளின் திசையருகில்
வழிகாட்ட வானவில்லும்
வான்மழையின் தூதுவனாய்..

வயற்பாங்காய் தென்னையில்
வகையாய் இசைபாடும்
வானதியின் கொலுசொலிக்கு
ஏற்றவாறே ரம்மியமாய்..

குயிலின் கீதந்தனை
மயிலும் கேட்கும்நொடி
மாணிக்க வீணையதில்
மரகதம் பொருந்தியதில்..

யாழிசை நாயகனாய்
அழகுற மீட்டுகையில்
ஆழியின் ஆழம் சென்று
பாரிலும் பர்வதமும்‌..

தேடாத திரவியமும்..
தென்படும் பொன்னிறமும்
தேய்கடலில் மின்னிடும்
அதிசயத்தில் அழகுறவே..

பார்த்தவளின் விழிமொழியில்
மறுமொழியும் மறந்து செல்ல..
அளவில்லா அழகுதனை
ஆனந்த மௌனம்கொண்டு..

அகம்முழுதாய் மகிழ
விருந்தினை போல்
விரும்பியே காணும்நொடி
இன்னும்நீள வேண்டுமடி..

© CG Kumaran

Related Stories