தனிமை என்னும் இருள்
இங்கே உலகம் நிலவொளியைப் எத்தனை காதல் செய்கிறதோ,
அத்தனை காதல் செய்ய மறந்து விடுகிறது தனிமை என்னும் இருளை காதல் செய்வதில்,
கண்கள் குளமாகிட
மனதில் இருதயம் இருந்த பகுதி கனத்திட,
எங்கே என் அமைதி என ஒரு இருள் சூழ்ந்து கொண்டு இருக்கிறது
இத்தனை வருடம் எல்லோரும்
வெளிச்சம் கண்டு வியந்து இருக்க.
வியப்பு என்ன என்றே மறந்து போக வைக்கும் இருள் பற்றி மறந்து விடுகிறோம்,
நம்மோடு பலர் இருக்கிறார்கள் என மனதில் தோன்றினாலும்
எங்கேயோ என்னை தொலைத்தது போல் உணரும் மயக்கம்
அது தான் காரிருள் என் வாழ்கையில் என அறியா தனிமை
எனொடு ஒற்றி கொண்டது,
நானும் விலக நினைத்து நினைத்து
என்னை சுற்றி இருப்பவர்களை விட்டு விலகி வர என்னை போன்ற கிறுக்கன் பூலோகத்தில் உண்டோ!
தனிமை என்னும் நிலை வருமாயின்
தேட வேண்டிய உறவை தேடிட வே
மனம் என்னும் மலர்ந்த காடு
பல மாயன்கள் செய்யும்
மனம் ஒரு முறை தனிமை கண்டுவிட
அனைத்து மரமும் காய்ந்த கூடாய் இருக்க..
இப்பொழுது நினைக்கிறேன்
தனிமையை அன்றே விட்டு விலகி இருக்க வேண்டும் என,
தீயாய் இருக்கும் இறந்த காலம் யாரால் அணைக்க முடியும்,
நிழலும் நிஜமும் மறந்து தனிமை சிரையினை பிடிக்கும் மனிதன் யாவரும் மரணத்தின் வலியை நித்தம் நித்தம் தழுவி கொள்வார்கள்
© அருள்மொழி வேந்தன்
அத்தனை காதல் செய்ய மறந்து விடுகிறது தனிமை என்னும் இருளை காதல் செய்வதில்,
கண்கள் குளமாகிட
மனதில் இருதயம் இருந்த பகுதி கனத்திட,
எங்கே என் அமைதி என ஒரு இருள் சூழ்ந்து கொண்டு இருக்கிறது
இத்தனை வருடம் எல்லோரும்
வெளிச்சம் கண்டு வியந்து இருக்க.
வியப்பு என்ன என்றே மறந்து போக வைக்கும் இருள் பற்றி மறந்து விடுகிறோம்,
நம்மோடு பலர் இருக்கிறார்கள் என மனதில் தோன்றினாலும்
எங்கேயோ என்னை தொலைத்தது போல் உணரும் மயக்கம்
அது தான் காரிருள் என் வாழ்கையில் என அறியா தனிமை
எனொடு ஒற்றி கொண்டது,
நானும் விலக நினைத்து நினைத்து
என்னை சுற்றி இருப்பவர்களை விட்டு விலகி வர என்னை போன்ற கிறுக்கன் பூலோகத்தில் உண்டோ!
தனிமை என்னும் நிலை வருமாயின்
தேட வேண்டிய உறவை தேடிட வே
மனம் என்னும் மலர்ந்த காடு
பல மாயன்கள் செய்யும்
மனம் ஒரு முறை தனிமை கண்டுவிட
அனைத்து மரமும் காய்ந்த கூடாய் இருக்க..
இப்பொழுது நினைக்கிறேன்
தனிமையை அன்றே விட்டு விலகி இருக்க வேண்டும் என,
தீயாய் இருக்கும் இறந்த காலம் யாரால் அணைக்க முடியும்,
நிழலும் நிஜமும் மறந்து தனிமை சிரையினை பிடிக்கும் மனிதன் யாவரும் மரணத்தின் வலியை நித்தம் நித்தம் தழுவி கொள்வார்கள்
© அருள்மொழி வேந்தன்
Related Stories