
19 views
பெண்களின் வலி
எங்கோ
யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
எனக்கு
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கவனிக்கல
மறந்து விட்டாள்
இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்
ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்
காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்
இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்
மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்
சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்
ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் சாய்ந்தால்
பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்
அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்
ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்
இப்போது
அவள் அருகில் நான்
கத்தினால்
கதறினால்
ஏதேதோ செய்தால்
வலியால்
அவள் துடிப்பதை பார்த்து
என்னால்
தாங்க முடியவில்லை
அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை
ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை
சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது
அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது
பாதி குழந்தை
வெளியில் வந்திருக்கையில்
வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதால்
எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பால்
என்று நினைக்கும் போது
நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்
ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்
ஒரு சில
நிமிடங்களில்
குழந்தையை கையில்
கொடுத்தார்கள்
நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்
அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்
மரியாதை செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்
இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன்
நன்றிகள் கோடி பெண்களே...💓
#collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
© புதியவன்💖🙂📲
யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
எனக்கு
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கவனிக்கல
மறந்து விட்டாள்
இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்
ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்
காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்
இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்
மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்
சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்
ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் சாய்ந்தால்
பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்
அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்
ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்
இப்போது
அவள் அருகில் நான்
கத்தினால்
கதறினால்
ஏதேதோ செய்தால்
வலியால்
அவள் துடிப்பதை பார்த்து
என்னால்
தாங்க முடியவில்லை
அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை
ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை
சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது
அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது
பாதி குழந்தை
வெளியில் வந்திருக்கையில்
வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதால்
எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பால்
என்று நினைக்கும் போது
நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்
ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்
ஒரு சில
நிமிடங்களில்
குழந்தையை கையில்
கொடுத்தார்கள்
நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்
அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்
மரியாதை செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்
இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன்
நன்றிகள் கோடி பெண்களே...💓
#collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
© புதியவன்💖🙂📲
Related Stories
32 Likes
10
Comments
32 Likes
10
Comments