...

6 views

தற்துணிவு
சில வேளைகளில எங்களால சுயமாய் இருக்க முடியாம இருக்கிற போல ஒரு நிலை சந்தர்ப்பங்களை பொறுத்து அமையும். சில பிரிவுகள் ஏமாற்றங்கள் மனக்கஷ்டங்கள் இப்படி பலதும் எங்களை ஒரு நிலையான சிந்தனைகளில கவனம் செலுத்த ஒத்துழைக்காது. எல்லாம் மனசு தான். இதுக்கு யார் கிட்ட ஆறுதலுக்கு போனாலும் எதுவும் சரி வராது. எங்களோட மனசு, சிந்தனை,புரிதல் எல்லாம் இன்னொருத்தரோட பார்வையில அவங்களுக்கு சாதாரணமான விசயமாக கூட இருக்கலாம். நம்மளோட பிரச்சனைகளுக்கு ஆறுதல் தேடி யார்டையும் போக வேண்டிய எந்த அவசியமும் இல்லை.இதனால இருக்கிற வேதனை தான் இன்னும் அதிகமாயிட்டே போகும். அவங்கட கருத்துக்கள் சில வேளைகளில எங்கள முன்னேற விடாம இப்போ இருக்கிற நிலையிலயே எங்கள இருக்க செய்யலாம் இல்லையா? யாரோட கருத்தும் தேவையில்லாத மன உளைச்சலை தான் கொடுக்கும். நமக்கான ஆறுதலை நம்மள தவிர யாராலையும் தர முடியாது.
எங்களுக்கு மனசளவில எந்த விடயம் செய்ய விருப்பமாய் இருக்குமோ அதாவது புத்தகம் வாசிக்கிறது, கவிதை எழுதுறது, பாடல், நடனம்,ஆன்மிகம் இப்படி நம்ம ஆர்வம் எங்க இருக்குமோ அதில எங்களோட சிந்தனைகளை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பினாலே இந்த மன கஷ்டங்களில இருந்து வெளியில வந்திரலாம். நமக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனை என்று பெரிதாக யோசிச்சு குழப்பிக் கொள்ளுறதுக்கு எதுவுமே இல்லை. எல்லாம் சின்ன விசயம் தான், இத விடவும் நம்மளோட வாழ்க்கை நமக்காக பெரிய அளவில எவ்வளவோ ஆச்சரியத்தை வைச்சிருக்கு. இதிலயே நாம துவண்டு போய் நின்றிட கூடாது. கொஞ்சம் புன்னகை, நேரான சிந்தனை,பெரிய நம்பிக்கை இவ்வளவுமே போதும் இல்லையா இதையெல்லாம் கடந்துட்டு போகிறதுக்கு...........

Let's move on .......♥️
© kavi Seelan