...

10 views

சிவந்த கன்னம்
யாருமறியாமல்
அவள் எனை
பார்க்கிறாள்….

அவள்
ஓரக்கண்ணால்
பார்ப்பதை
அவளும்
அறியாமல்
ரசிக்கும் நான்….

தினம் அரங்கேறும்
இந்த நாடகம்
ரம்மியமானது….

இன்று அவள்
எனை பார்க்கும்
போது நானும்
அவளைப்
பார்க்க….

சட்டென்று
நாணத்தால்
சிவந்தது அவள்
கன்னம் ……

மருதாணிச்
சிவப்போ
மங்கை
கன்னச்சிவப்போ
என ஐயம்
தோன்றியது…..

சிவந்த
கன்னச்சிவப்பால்
அவள் தன்
காதலை
சொல்லிச்
சென்றாள்…….️️️