...

14 views

தவிப்பு
வருவேன்
என்பதும்
என்பதும்
வராமல்
போவதும்
வாடிக்கை
ஆனது உனக்கு….

நீ எப்படி
அறிவாய்….
உனைக்காண
உன் தோள்
சாய்ந்து பேச
பல கதைகளையும்
கண்ணில்
கனவுகளையும்
தேக்கி உன்
வரவுக்காக
வழிமேல்
விழி வைத்து
காத்திருப்பவளின்
தவிப்பும்…வலியும்….

கேட்டால்
‘ எதுக்கு
ஒண்ணுமில்லாத
விஷயத்தை
பெருசாக்குற'
எனும் இயல்பான
வார்த்தையால்
காலில் போட்டு
நசுக்குகிறாய்….

உன் மீதான
என் காதலையும்….
கனவுகளையும்…….