...

5 views

மறுவார்த்தை





அவனைக் காணாமல்
பரிதவிக்கும் நெஞ்சம்
அவனருகில் வந்ததும்
சற்றே அவன் தோள்
சாயந்து  இளைப்பாறும்….

அவன் கைகோர்த்து 
நானிருக்கிறேன்
என சொல்லாமல்
சொல்லும் நேரங்களில் அவன் அன்பில்
திளைக்கிறேன்….

அவனருகில் வந்தால்
படபடபடக்கும் இதயமும்
பாங்காய் அவன் பரந்த
மார்பில் சாயந்து  தாயைக்
கண்ட சேய் போல் அமைதி
கொள்ளும்….

பேச துடிக்கும் உதடுகளும்
அமைதிதாய் சிறை கொள்ளும்
அவன் இதழொடு இதழ் சேர்க்கையில்…

அவன் அருகில் இருக்கும்
நேரங்களில் கவலைகள்
எல்லாம் மறந்து காதல்
உலகில் சஞ்சரிக்கும் மனம்….

அவன் அணைப்பில் அனைத்தும்
மறக்கும் நெஞ்சம்
அவனின் அன்பில்
திளைத்து உருகும்…

அன்பாய் தலை கோதுகையில்
அவனின் மடி சாய்ந்து
தன்னிலை மறக்கும்
இவள் பேதை மனம்….


குட்டி குட்டி செய்கையால்
அவன் அன்பை உணர்த்தும்
நேரங்களில் மனம் மறுவார்த்தை
பேசாமல் அவனிடம்
தோற்றுத் தான் போகும்….

அன்பு செய்து அன்பு செய்து
என்னை அவன் ஆயுள்
கைதி ஆக்கியவன்…

என்றும் அவன் இதய ராணி
நானே என்பதில் சற்று
இறுமாப்பும் கொள்ளும்
என் மனம்….

அவன் அன்பின் முன்
என் காதலும் மறுவார்த்தையின்றி
மண்டியிடும்…..

எப்போதும் இந்நிலை நீடிக்க
வேண்டுகிறேன்… அவனின்
கைகளில் தஞ்சம் புகுந்து
மஞ்சம் சேர வேண்டுகிறேன்…..

அவன் அன்பு ஒன்றே
போதும் இந்த
ஆயுளை நான் கடக்க…..


-ந.ரா.சீதாலஷ்மி