...

28 views

சொல் யாரென்று சொல்...
என்னை சுற்றிலும்
நிறைந்திருக்கும்
தனிமையில் நீ இல்லை...
உனக்கும் எனக்குமான
தூரங்களின் நீச்சிதான் என்ன...?

எங்கோ இருக்கிறாய் நீ..
எனக்குள் எப்படி துடிக்கிறாய்..
அப்படியானால் உனக்கும்
எனக்குமான எல்லை தான் என்ன...?

என்னால் மறைக்க முடியாத
ரகசியம் தான் நீயா..
என்னால் மறக்க முடியாத
தீண்டல் நீயா..

என்னிதயச் சுவர்களில் எதிரொலிக்கும்
அத்தனையும் நீ..

இப்போது சொல் உனக்கும்
எனக்குமான இடைவெளிதான் என்ன...?

நான் காணும் அத்தனையிலும் நீ..
காட்சியின் ஒளியில் நீ..
கனவின் கருவில் நீ..
கருவிழி மூழ்க செய்யும்
கண்ணீரில் நீ..

இப்போது சொல்..
எனக்குள் துடிக்கும்
இதயத்தின் மொழிதானே நீ....!



© sha💕jan