...

4 views

கல்லூரி காலம்
அளவில்லா ஆனந்தத்தையும் ஈடில்லா இன்பத்தையும் தரும் அற்புத காலம் !!
சொர்க்கத்தை காட்டும் கண்ணாடி !!
கோபத்தால் வேர்விடும் சினமும் சண்டையும்
அன்பால் நட்பும் காதலுமாய் மலரும் அழகிய காலம் கல்லூரி காலம் !!
ஆண்டுகளில் முடிந்தாலும் ஆயுளுக்கும் தொடரும்
கற்ற கல்வியும் கடைபிடித்த பழக்கங்களும் !!
தடம் பதிக்கும் மாணவர்கள் தடுக்கியும் தள்ளியும்
தடைக்கல்லில் மோதி அதையே பாதையாக்குகின்றன !!
பாதை போதையானால்
கெடுவது உடல் முறிவது உறவு
வருவது நோய் போவது உயிர் !!
குடிப்பது நான் பாதிப்பு எனக்கு என்று கூறினால் அது மடத்தனம் !!
பாதிப்பில் போவது வேண்டுமானால் உன் உயிராக இருக்கலாம் !!
போன பின் வரும் கஷ்டத்தில் தட்டுதடுமாறுவது
உனக்காக உன்னுடன் இருப்பவர்களே !!
விளைவறிந்தே விதியை முடித்துக்கொள்ளாதே !!
காலம் கடந்தாலும்
வினைகள் தொடரும் மறவாதே !!
© காவ்யா 🦋👑