...

7 views

நிலா
சிறு குழந்தையாக தோன்றி-நீ
ஈரேழு தினங்களில் முழுமைப் பெற்று
இனிமையான புன்னகை போல்-நீ
அழகு முகம் காட்டி,
குளிர்விக்கின்றாய் என் பொன்னிரவை;
பௌர்ணமியாக வந்த-உன்
பவள மேனியை புகை மேகம்
மறைத்து என் மனதை வதைக்கின்றதே;

என் தோழியே உனக்கு- என்மீது
அவ்வளவு பாசமோ? புகை மேகத்தை
விரட்டி எனக்கு இன்பத்தை ஊட்டி
சிறு குழந்தைகளின் பசியாற்றிய-நீ
பின்பு ஏனடி தேய்கின்றாய்;
வளர்ந்தது போதுமென்று-நீ
காணாமல் போகின்றாயே அமாவாசையாய்,
என்மீது என்ன கோபமோ!- நான்
செய்த பிழைதான் என்னவோ!!- உனக்கு
இனிய இரவு வணக்கம் கூறும்
எனக்கு காலை வணக்கம் கூற
உனக்கு விருப்பமில்லையோ!
ஏன்?
ஏக்கத்தில் காத்திருக்கும்
என் காலை நேரம்.