...

1 views

ஏன்
இல்லை என்பதறிந்தும் தேடித் தொலைவது ஏன்?
இறக்கும் வரை பேராட்டாம்
இறுதியில் வென்றவர் யார்?
இறைவன் சாமி ஆதிசக்தி என இருப்பதெல்லாம் எங்கே?

இங்கு வாழ்வதென்னவோ சாத்தானின் சந்ததிகளே
அங்கங்கே சில நொடிகள் இறைமை எட்டிப் பார்க்கிறது
அதற்கும் தேவை கோடிக்
கண்ணீரபிசேகம்...
அத்தனையும் அவன் செயல்
என நம்பியேச்
சாகச் சொல்லும் சாத்திரங்கள் கொன்று தின்று விட்டது பலர் நம்பிக்கையை ...
துன்பம் மட்டும் தான் வாழ்வென்றால் விதிக்கு தெய்வமும் விலக்கில்லை யென்றால்
எதற்கித்தனை மதங்களும் மார்க்கமும் ஆலயங்களும்
இரவும் பகலும் அழுதுருகி கேட்டும் உடன் வந்து நில்லாத தெய்வம் - தேடியவனே தொலைந்த பின், வந்தென்ன செய்யப் போகிறதோ?

© Dr. Rajina Banu A