...

18 views

என் பெருங்கடல் தாகமே
என் பெருங்கடல் தாகமே..
உன்நினைவுகள் பேசுகிறேன்...

பூ தன் பெயர்
மாற்றிக்கொள்வதால்..
தன்வாசமும் நேசமும்..
மாறிப்போகுமா...

காத்திருப்பின் மடிதன்னில்..
கனவுகளாய் பொய்த்தது போதும்..

நீ தலைசாய்ந்து இளைபாறவே..
நான் கவிதையாய்
பூத்துக்கொண்டிருக்கிறேன்...

நிலவொளியில் பொசுங்கி..
நீ தொலைத்த கனவுகளை..
வேண்டுமானால்
என்னால் மீட்டித் தர
இயலாமல் போகலாம்..

நினைவுகளால்..
நிழல் பரப்பி..
நித்தம் நூறு கவிதைகளால்..
தாலாட்ட இயலும்..


உன்வெட்டவெளியினில்
வெண்ணிலவாய்..
இல்லாவிட்டாலும்..
சிறு மின்மினியாய்..
நிறைத்துப் போக
இயலும்..

கண்களை மோதும்
காற்றில்..
இவள் முகம் காண்..

நெஞ்சை மேயும்
பாட்டில்..
இவள் குரல் கேள்...

இனி பிழையில்லா
இவள் அன்பினை
எழுத்துப்பிழையாய்..
வாசித்துப் போ...!


© sha💕jan