...

11 views

நன்றி கற்கட்டும்...
கோவையில்...
ஓர்
தனியார் அமைப்பு நடத்திய
கவிதைப் போட்டியில்
பரிசு பெற்ற
அடியேன் கவிதை...
தங்கள் பார்வைக்கு...
-------------------------------------------------------

நடிகனின் படத்துக்கு
பாலபிஷேகம் செய்யும்
பாதகம் கண்டு
கதறியது பசுங்கன்று

கதறிய கன்று கண்டு
பதறிய பசுவொன்று
சீறிச் சினந்து செப்பியது
காறி முகத்தில் துப்பியது

கன்றை ஒட்ட விடாமல் தடுத்து
மடியை ஒட்டக்கறந்து
மண்ணில் கொட்டிக் கவிழ்க்கும்
மானிடப் பதர்காள் கேளீர்....

இனி....
பால் குடி மறந்த
உம் பிள்ளைகளுக்கு
பசும்பாலுக்குப் பதிலாய்
நாய்ப்பால் புகட்டுங்கள்

நன்றி கற்கட்டும்
நாளைய தலைமுறை ....

#வேல்முருகன் கவிதைகள்

© வேல்முருகன் கவிதைகள்