...

6 views

ஆழ் மனதின் வரிகள்
ஏனோ ஒரு பார்வை அவள் வீசி செல்ல எதர்ச்சியாக,
தூண்டில் மீனாய் சிக்கியது என் இதயம்,
ஒற்றை பார்வை என்ன செய்து விடும்,
இதழ் முதல் இதயம் வரை,
மயக்கம் செய்து,
காதல் என்னும் கடலில் மூழ்கிட தான் செய்யும்,
அவள் உ சொன்னாலும் ஊ ஊ சொன்னாலும்,
அவள் விழி அசைவில் மொத்தமாய் தொலைந்து போய் நிற்கிறேன்,
தொலை தூர அழகியே,
நித்தம் மனதில் தீட்டும் ஓவியமே,
கவியே காதலின் கை அசைவே,
மாயம் ஏதோ செய்தாய்,
மதிமயங்கி மடிந்தேன் நானும்.
பேரழகே ❤️
© அருள்மொழி வேந்தன்