...

13 views

அவளின் ஆசைகள்!
ஆம்!
அவளின் ஆசைகள்
ஆயிரம் ஆசைகள்
கேட்கவில்லை...

என்னிடத்தில்
அவள் கேட்ட
முதல் ஆசை

அழகாய் அசையாமல்
பூவில் தேன் உண்டு
பரவசமாய் பறந்த
பட்டாம்பூச்சி பிடித்துகுடு
என்று..
எந்தன்
பத்து வயது
பட்டாம்பூச்சி கேட்டது

அவளுக்காக ஓடிப்பிடித்தேன்!
மூச்சை பிடித்து
அவளின் முன் நின்றேன்!

சற்றும் என்னை
பாராமல் பட்டாம்பூச்சி யின்
மெல்லிய சிறகை
மயிலிறகு போல் மெதுவாக
தடவி ‌....

எந்தன் நெற்றியில் வைத்து
உனக்கு வேண்டியதை
நினைத்து கொள்
என்றாள்....

அவளை
நான்
நினைப்பேன் என்று
அறியாமலே!
அவளின் விளையாட்டு!
அவளின் வினையே!

நான்
நினைத்தால் அல்ல...

எனக்காக
அவளே வேண்டியதால்
எனக்கு கிடைத்தாள்
மற்றொரு தாயாக !
.
© Nuradhaag