...

20 views

வரம்
இதுவென்று யாரிடமும்
சொல்லிட முடியாத
வலிகள் பெண்ணுக்கு
ஏராளம்...

ஆசைகள் கற்பனைகள்
நீளும் போது வலிகளை வரமாக்கி மகிழ்கிறாள்...

பிடித்தவற்றை கிடைக்கப் பெறாத நிலையில் ஒரு பெரும் மூச்சோடு புன்னகையை சுவாசிக்கிறாள்...

எதுவென்றாலும்
வலிகளை வரமாக்கி கொள்கிறாள்...

பிறந்த வீட்டிலும் சரி
புகுந்த வீட்டிலும் சரி
பணி புரியும் இடத்திலும் சரி
உறவுகளிடத்திலும்
பெண்மை வலிகளை
வரம் போலவே
ஏற்றுக்கொள்ள
பழகிக்கொள்கிறாள்..

வலியேன்ற வரம்...




© Aadhira