...

11 views

முடியாத பொழுதுகள்
முடியாத பொழுதுகளில்
மடி தர மறுக்கும்
தடி இடையாள்
கடிதே இருக்கிறாள்

விடியும் வரையும்
வடியும் இரவில்
நொடியும் மூடாமல்
துடிக்கும் விழிகள்

அடிக்கும் நாவில்
கடிக்கும் சொற்கள்
துடிக்கும் நெஞ்சம்
வெடித்து சிதறும்

மடித்த மனத்தில்
மடிந்த ஆசைகள்
பிடித்த கைகளில்
நீடிக்கா கனவுகள்

நடிக்க அறியா
கடிக்க விரும்பா
வடித்த சொற்களில்
படிக்காத கவிதைகள்...

© வேலு இரவி 🌞✒️