...

11 views

வரமா சாபமா
நீ எனக்கு
வரமா…
சாபமா....
தெரியவில்லை
எனக்கு….
கொஞ்சிகொஞ்சி
பேசுகிறாய்
சில
நேரங்களில்
மிஞ்சி போகிறாய்….

உன் கோவம் கண்டு
கதிகலங்க வைக்கிறாய்….

சமாதானம் செய்கையில்
மூச்சடைக்க வைக்கிறாய்….

சில நேரங்களில்
நீயே நெருங்குகிறாய்…..

அருகில் வருகையில்
வார்த்தைகளால்
வசைபாடி விலகுகிறாய்…..

உனை புரிந்து கொள்ளும்
வழி தெரியாமல்
கரைந்து போகிறேன்….

உன் அன்பில்
தொலைந்து போனவள்
திண்டாடுகிறேன்….

உன் காதல்
வரமா
சாபமா என அறியாமல்…..

- சீதாலக்ஷ்மி...