...

5 views

கருமை

பார்வையால் கைது செய்ய நினைக்கையில்
நானோ சிக்கி கொண்டது உன் கண்மையில் !

மழை மேகம் தந்த மண்வாசனை இல்லை
சாரல் நனைந்த உன் கூந்தல் வாசத்திற்கு இணையில்லை !

ஆழம் இல்லை கருந்துளையே
அதை விட பல மடங்கு சிறிய உன் கன்னங்குழியே !

வானவில்லில் ஏன் வண்ணம் ஏழு மட்டும்
நீ உரசி சென்று எட்டாகட்டும் !

வண்ணங்களை வென்ற
என் பேரழகே !

இதோ கவி எழுதிய
என் பேனா மையும்
உன் கருமை சேர்ந்து கலர்
ஆனது !