5 views
கருமை
பார்வையால் கைது செய்ய நினைக்கையில்
நானோ சிக்கி கொண்டது உன் கண்மையில் !
மழை மேகம் தந்த மண்வாசனை இல்லை
சாரல் நனைந்த உன் கூந்தல் வாசத்திற்கு இணையில்லை !
ஆழம் இல்லை கருந்துளையே
அதை விட பல மடங்கு சிறிய உன் கன்னங்குழியே !
வானவில்லில் ஏன் வண்ணம் ஏழு மட்டும்
நீ உரசி சென்று எட்டாகட்டும் !
வண்ணங்களை வென்ற
என் பேரழகே !
இதோ கவி எழுதிய
என் பேனா மையும்
உன் கருமை சேர்ந்து கலர்
ஆனது !
Related Stories
5 Likes
0
Comments
5 Likes
0
Comments