...

5 views

மழை
மழை

நல்ல மழை கெட்ட மழையென
இரண்டு உண்டு என்பார்
நல்ல மழை தீடீரென வந்து
சிறு துளிகளாய்
பெய்துவிட்டு போவது
தூறல் மழை சாரல் மழை
செய்துவிட்டு போகும்
புயல் மழை எப்பொழுதும்வந்து மக்களை மிரட்டும்
இதுவே
கொடூரமான மழை
கோபமான மழை
சீற்றம் மிகுந்த மழையென
பேசிக் கொள்கிறோம்
மழை எப்படிப்பட்டதாய்
இருந்தாலும், மழை
பூமிக்கு தேவை
இயற்கை இப்படித்தான்
படைத்திருக்கிறது அப்படியே
மனிதன் செயல்படுகிறான்
நல்லவனாக கெட்டவனாக...!!

ந க துறைவன்.






© All Rights Reserved