...

6 views

கண்ணனே நீ வர காத்திருந்தேன்

கார்த்திகை கண்ணனை காதலித்தேன்....
கண்களில் பூட்டி வைத்தேன்....
காலங்கள் கூடிட காத்திருந்தேன்....
கண்மலர் பூத்திருந்தேன்...!!!

நேசத்தில் ஆயிரம் ஆசைகளே
நெஞ்சுக்குள் சேர்த்து வைத்தேன்.....
வாசத்தில் மிஞ்சிடும் பூக்களிலே....
மல்லிகை போலிருந்தேன்....

வேல்விழி பார்வையில் நான் விழுந்தேன்.....
வெட்கத்தில் தான் தொலைந்தேன்....
ஆயிரம் விண்மீன்கள் ஒன்றாகி....
என் முன்னே நான் கண்டேன்....
ஆயினும் உன் வடிவில் நின்றாடி....
அந்த வெண்ணிலவை தான் கண்டேன்....
சேயெனும் உறவினில் உனைத்தேடி .....
உனக்கிந்த பெண்ணிலா தாயாவேன்....

மேகங்கள் சேர்த்து தூளி செய்து....
வானத்தில் கட்டி ஆட்டி வைப்பேன்....
தூக்கத்தில் நீ கொஞ்சம் சிணுங்க கண்டால்....
அந்த சூரியனில் நீரூற்றி அணைத்து வைப்பேன்....

நித்தமும் நீ கொஞ்சம் நீராட .... அந்த
மின்னலில் நீரூற்று செய்திடுவேன்....
சித்தமும் சிரித்து விளையாட உனக்கு
விண்மீன்கள் பந்தாய் மாற்றிடுவேன்....

இப்படியே ஒவ்வொரு நாளாக உன்னை....
கற்பனை செய்து நேசித்திருப்பேன்....
எப்படியும் உனக்கொரு சேயாக என்னை.....
சொப்பனம் கண்டு பூசித்திருப்பேன்....!!!!!
© கவிநேசகி

#கவிநேசகியின்கிறுக்கல்கள்
#கார்த்திகைக்கண்ணன்
#கனவுநாயகன்
#கற்பனைக்காதல்