...

32 views

மனதின் ரணம்
பிடித்தமின்றி போனது
பிழையான உன் புரிதலால்

பிடிக்கவில்லை என்று
இன்னும் எப்படி சொல்ல

சொற்களைக் கொண்டு
வசைபாட மறுக்குது
இளகிய மனம்

காரண காரியமெல்லாம்
கேட்டு விட துடிக்கிறாய்

உன்னை கண்டாலே
வெம்பும் விழிகளுக்கு
எதை கொண்டு சமாதானம் செய்வது
என அறியேன்

இந்த குழப்பத்தில் வந்து
அன்பெனும் மீனை
பிடிக்கலாம் என்ற
தப்பு கணக்கை போடாதே
- கவிமலர் ராஜூ