...

2 views

உணர்வின் நிழல்! - விண்மீன் ரசிகன்
இருளிற்குள் தத்தி தாவி செல்லும் அஃறிணை போலே நானும் அலைந்து திரிந்தேனடி...
ஒளியாய் நீ என்னுள் நிறைந்தால் என்ன?

இனிமைமிக்கவளே!
உந்தன் மீதான ஈர்ப்பினில் எனை முகிழ்த்தேன் சகியே,
உணர்வின் சுயம் மறந்து எனை நானே துறந்து அலைபாய்கின்றேன்...

இன்றுவரை உன்னை நாடித்தான் எந்தன் கால்கள் தவழ்கின்றன..
இக்கணத்திலும் உன் சுவாசத்தின் வாசம் உணர்ந்தே ஏதேதோ புலம்புகின்றேன்.

இனியாவது உந்தன் உலகினில் எனை உலாவ அனுமதிப்பாயா?
எங்ஙனம் நானுனக்கு சேதிச்சொல்லுவேன்...

இத்யாதி இத்யாதியாய் எந்தன் காதல் மொழிகளை நான் பகிர்ந்தே வருகின்றேன்..
இயல்பாய் உன்திசை நோக்கி வந்தாலும் திட்டமிட்டு வந்தாலும்
நீயே எந்தன் ஆன்மாவின் சோதியென்று ஏன் உணராமல் இருக்கின்றாய்...

இருத்தலும் இல்லாமையும் வாழ்வின் நிலையற்ற தன்மையை உரைத்த போதிலும் உந்தன் நினைப்பு ஒன்றே என்னை சீவிக்க வைக்குதடி சகி ..

#விண்மீன்ரசிகன் #தோழியிசம்
© sathyasanjeevi