...

7 views

பறக்கவே பிறந்தோம்
நாமும் உயருகிறோம்
பிறரை உயர்த்தும் வரை

விடுவிக்கப்படுகிறோம்
பிறரை விடுவிக்கும் வரை

நட்சத்திரங்களாய் மிண்ணுகிறோம்
அன்பின் வழி செல்லும் வரை

முயற்சிப்போம்
முயற்ச்சியின் பலன் முழுமை அடையும் வரை

ஆராதிப்போம்
நம் ஆத்மாக்கள்
உயர்ந்த நிலையை அடையும் வரை

தியானிப்போம்
நம் கண்கள் விண்ணுலகம்
காணும் வரை

காத்திருப்போம்
படைத்தவர் நம்மைப் பறக்கச் செய்யும் வரை

சொர்க்கத்தில் ஒரு இடமும் இல்லை
நாம் அடைய முடியாது என்று

முடியும் என்ற மனதுடன் கடவுளிடம்
ஒருமித்து நடப்போம்.




© BeulahB