...

10 views

அயல்நாட்டு கணவனுக்காய்....

உணர்வெல்லாம் உன்னுடனே
அயல்நாடு கொண்டு சென்றாய்..
அங்கிருந்தும் அனுதினமும் உன்
அன்பில் எனை வென்றாய்..

அணைத்திடவே நீயில்லா
திருமணநாள் என்றாலும்..
என் மனமும் எரிதழலில்
இட்டது போல் வெந்தாலும்..

நம் குடும்பம் காத்திட நீ சென்றதை
நான் அறிந்துகொண்டேன்..
இருள் நீக்கும் ஒளி நீயே,அதை நானும்
புரிந்து கொண்டேன்..

தவறேதும் நான் செய்தால்
தவறாமல் திருத்திடுவாய்..
கடுஞ்சொற்கள் கூறாமல் எனை
நீயும் அனைத்திடுவாய்..

நம் அன்பின் சான்றாக இரு பிள்ளை
ஆனாலும்,நீ கானும் முதல் பிள்ளை
நானாகி போகின்றேன்..

உன் அன்பு அதை நானும் பெறும்
இவ்வேளையிலே,நான் கொண்ட
வாழ்வதன் அர்த்தமும் அறிகின்றேன்..

நான் கூறாபொழுதினிலும் என்
தேவை உணர்கின்றாய்..
என் தேவை அதை செய்திட பல
தியாகம் செய்கின்றாய்..

நீர் கொண்ட மீன் போன்றே
உன் வாழ்வில் நானும் தான்..
நீர் இல்லா மீன் போல்தான் நீ
இல்லா நானும் தான்..

என்னவனே..
எனை ஆளும் மன்னவனே..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
© பினோய் பிரசாத்