...

8 views

காலை விடியல்
நிசப்தமான நித்திரையில் நான்
கலையாத கனவோடு
கங்கை நீராட,
கொண்டை சேவல் கூவ
காதோரம் ஒரு குரல்
விடியற்பொழுதில் உறக்கம் என்ன?
என் தாயின் குரல்
கண்களை தேய்த்த வண்ணம்
விழித்துக் கொண்டேன்
கதிரவன் கரம் நீட்டி
என்னை எழுப்ப
இனிதே என் காலை நேரம்
துவங்கியது
சொப்பனத்தில் சித்தரித்த
கனவுகளை தேட
சிறகை விரித்து.....