...

2 views

உள்ளமும் நிறைந்தது
காலங்களில் காவல் கவிதையும் கூறுமோ
கண்டதை(யெல்லாம்)யும் கண் நோக்கும் ஆனால்
கருத்தில் நிற்குமோ
கிள்ளிட்ட வலியும் நீங்கிடா நொடியில் விழிகளில் வழியும் உருவம் உண்மையாகுமோ
கீழ் நீலம் திரண்ட திரள்களின்
திவலை நிலங்களின்
தாகம் தீர்க்குமோ
குன்றுகளின் துளி நேயம் உண்டென்பதை துளிர் விடும் உச்சி தளிர்களும் கூறுமோ
குட்டி குட்டி நீரோடை களில் துள்ளி குதிக்குதே கலகல வென சத்தமிட்ட படி காட்டு குள்ளே வெள்ளி சித்திரம் நடனம் பயிலுகிறாளோ
அதிகாலை தங்களின் வெப்பம் தனிக்குது குழாய் அடி சொட்டும் சில துளிகளும் பயனை பெற்று விட்டது போன்று கொட்டி கொண்டிருந்தது நிசப்தமான பொழுதில் அந்த மலை கிராமம் சடுதிபொழுதில் என் உணர்வில் ஏற்பட்ட மாற்றங்களோ 🌼🤍
வணக்கம் 🌼🤍🙏🏾
© Ash(ஈசன் )