...

7 views

தொலைந்தூர காதல்
நினைக்கிறேன்...
நினைத்து நினைத்து
ஏங்கி நிற்கிறேன்…!

நீயோ தொலைவிலிருக்க
உன் நினைவாய்
உயிரை உருக்கி
வாழும் நானோ…!

இத்தனை
தொலைவு இருக்க
ஏனோ நீ
நெடுந்தூரமாயிருந்து
தொலைக்கிறாய்…!

வலிக்கும் இருதயத்தை
மெதுவாய் வருடியே
வலிகளை மறக்க செய்கிறாய்…!

தினமும் புலம்புகிறேன்
நீயிருக்கும்
திசையை நோக்கி…!


நீயோ என் புலம்பல்களை
கேட்டும் கேட்காததுமாய்
மெல்ல புன்னகைத்துவிட்டு
செல்கிறாய் என் இருதயத்தில்…!

உன் புன்னகையை
கண்டு நானோ முறைக்கிறேன்
உன்னை நோக்கி…!

என் கோபம் கொண்ட அகத்தின்
முறைப்பு கூட உனக்கு
நகைப்பாகத்தான்
இருக்கிறதோ
ஏனோ…!

அன்பனே…!


அன்பென்றும் காதலைக் கூறிவிட்டு
ஏன் எத்தனை தூரம்
சென்று என்னை வாட்டுகிறாய்…

© ER.RANJITHA DHARA