...

8 views

அடியே முட்டாக் கிழவி!
யே...முட்டாக் கிழவிப் புள்ள...!
நீ இருக்கும் வேளையில
ஆத்தாவின் மடி
அருகாமையில ஆனதடி...
பவளப் பல்லுங்க
வைரமா உதிர ஏனோ உனைப் பார்க்கையில
முத்து சிரிப்பு பெருகுதடி
என் முட்டாக் கிழவி!
எப்படி நா உன்ன ஏசினாலும்
என்னைப் பாரமென்று நீ நெனைக்களையேடி பொன்னம்மா!
மையிரெல்லாம் நெரைக்கையில
மனங்கோர்த்து நடந்தவளே...
அள்ளி அணைக்க ஆள் இல்லனு
நெத்திபொட்டில் உரைக்கையில
'யோவ் கிழவா' வந்துடேன்னு
நெஞ்சாங்குழியில் ஒட்டிகிட்டவலே... அஞ்சிக் கொஞ்சிய காலமெல்லாம் ஓஞ்சிதடி கருவாச்சி
உன் புடவை முந்தானையே நஞ்சிதடி!
வலி வரும் வேளையிலுயும்
முகம் சுளிக்காம சுத்தி சுத்தி வந்தவளே...
கால் வயிருக்
கஞ்சியானாலும்
காத்திருந்து குடிச்சவளே..
என் பொம்மாயி!
பாடையில போனாலும் பக்கத்தில நீ வேணும்!
சேர்த்து வைச்சது ஒன்னும் இல்ல..
உன் காதல் ஒன்னே போதும் புள்ள!
அடியே... முட்டாக் கிழவி கண்ணு ரெண்டும் பூக்குதடி....
கட்டியனைக்க ஏங்குரேண்டி...
வெட்டி வேலையெல்லாம் போதுமடி... கன்னம் கிள்ளி
முத்தம் பதிக்க துள்ளிவாயேன்...
என் செல்ல முட்டாக் கிழவிப் புள்ள!

© kookoo