...

10 views

மனம்
வயல் வெளியில்
இயற்கையை
ரசித்தவாறே
நடந்திருக்கலாம்...

நீரோடையை ஒட்டி
வளர்ந்திருந்த
செடியின் கிளையை
ஒடித்து பறித்த நொடியில்
முள் ளொன்று பாதத்தை
பதம் பார்க்க
வலித்தபடி எனது ரத்தம்
விடுதலை பெற்றது!

ஒடித்த செடியின்
கிளையிலிருந்தும் திரவம்
விடுதலை பெற்றது!

இயற்கை எனக்கு
உணர்த்தியது...

மனித மனம் பெற்ற
குரங்கே
ஒடித்த செடிக்கும்
உயிர் உள்ளதென்று.

© சிவா