...

4 views

குழந்தைப் பாடல்
ஆகாயத்தில் வசித்த நிலவு
ஆடிப்பாட வந்ததாம்
ஆடிப்பாடி முடித்தப் பின்னே
அசந்துப் போனதாம்
வீதியெல்லாம் புகைக்காற்று
திணறி மேலே சென்றதாம்
மேகமெல்லாம் அனல்காற்று
தொப்பென்று கீழே விழுந்ததாம்
மயக்கம் தெளிய நட்சத்திரம்
தண்ணீர் கொண்டு வந்ததாம்
மதி கொஞ்சம் மதி தெளிந்து
வானத்திற்குச் சென்றதாம்
புகை நமக்குப் பகையென்று
புரியவில்லை நமக்குத்தான்
புகையிலையாலே நோய்கள் வந்து
இறக்கின்றறோம் எதற்குத்தான்?
நல்ல பழக்கம் கொள்ளுவோம்
நமது உடலைப் பேணுவோம்.


© சரவிபி ரோசிசந்திரா