...

7 views

காதல் ஒன்றே மாறாதது
அன்று, நீ செல்லும் பாதையில் , சிறிது தொலைவில் உன்னைத் தொடர்ந்தேன். இன்று, அதே பாதையில், உன் நிழல் போல் உன்னைத் தொடர்ந்தேன். என் மனதில் ஒரே ஒரு சிந்தனை. நாம் சென்ற பாதைகளில், எண்ணில் அடங்காத மாற்றங்கள்.. மரங்கள், மக்கள் என யாவும் மாறின..ஏன், நீயும் நானும் கூட சிறிது மாறியிருக்கலாம். ஆனால் மாறாத ஒன்று, நான் உன் மேல் வைத்துள்ள காதல்.. நிலை மாறாத நிலவு போல.. நிறம் மாறாத காகம் போல... மணம் மாறாத மலர்களைப் போல... அலைகள் ஓய்யாத ஆழி போல...
© Anbazhakan S