...

10 views

சர்ப்பம்
தப்பிப்பிழைத்த
இரவொன்று
இன்று வந்தது பணிபுரிய.

எனதறையில் நான் உறங்கும்முன்
புஸ்ஸென்ற சீறல் ஒலி
கேட்டு முடிய...

திக்'கொன்று
துயிலைக்கொன்றது.

புலன் அறிந்தது
சர்ப்பம்தான் அதுவென்று.
உறுதி செய்தபின்

நகர மறுத்த
கால்களின் கீழே
நெளிந்தது தரை...

மேற்கூரை ஆயிரம்
ஜவ்வரிசி விழிகளை
திறந்து மூடியது.
விளக்கொளிகள்
நீலமாய் ஒளிர்ந்தது.

அறையும் வளைந்து நெளிய
கொதித்த காற்றில்
எலிகள் செத்து விழுந்தன.

எனது பேனா அந்தரத்தில்
மகுடியாய் இசைக்க..

நான் தோலுரிக்கலானேன்.

© sparisan