...

9 views

செவ்வானம் ........
பகலவன்
பள்ளியறை
போகும் நேரம்..... பெண்ணொருத்தி
பவனி வந்தாள் சாலையோரம்.....

இளந்தென்றல் இனிமையாக
அவள் முந்தானையில் அலைபாய....


கார்மேகக் கருமை கன்னியவளின் கருங்கூந்தலில் கடமையாற்ற.....

பாரதியின் துணிச்சல் பாவையவளின்
விழிகளில்
விரிந்திட....


என் இதழ்கள்
என்னவளின்
அதரங்களில்
அழுத்தமிடச் சொன்னது....


கன்னியவளின் கர்வநடையில் கவர்ந்திழுத்து கட்டுப்பாடற்றேன்....


பெண்ணவளின் பெண்மையை மெல்லத் தீண்ட
பெருமுயற்சியெடுத்து பேரதிர்ச்சி கொண்டேன்....


கன்னியவளின் வதனத்தில் கணக்கற்ற அளவு செவ்வானத்தின் செம்மையின்
வெம்மையைக்
கண்டதால்.....


வழியிழந்து
விழிபிதுங்கி
வாய்பிளந்து நின்றேன் வாயுதேவனான நான்.....


மங்கையின் வெடக்கத்தை மட்டுமே செவ்வானம் என்றுரைக்கும்
எனதருமை சகாக்களே....


கன்னியவளின் கடுங்கோபமும் செவ்வானம் என்பதை சிந்தையில் கொள்ளுங்கள்....
© 💞அனுராதை பாரதி 💞

Related Stories