...

4 views

மாயாஜாலம்
கைகளில் இருந்த பூக்கள்
கண்மூடித்திறந்தால்
காணவில்லை.
ஆனால்,
அவன் கைநிறைய மிட்டாய்கள்.

குதூகலமாய் சூழ்ந்திருக்கும்
குழந்தைகள்..

மிட்டாய்கள் எல்லாம் பஞ்சுமிட்டாயாய்
பல வண்ணங்களில் மாறியது!

பகிர்ந்து கொடுத்தான்
பிஞ்சுக் குழந்தைகளுக்கு,

கல கலவென கண்ணீருடன்
சிரித்த குழந்தைகளைப் பார்த்து குதூகலமானான்,

மந்திரக்கோலை கையில் வைத்திருந்த
மாயாஜாலக்காரன்!

இன்றைய " மேஜிக் சோ" முடிந்தது.

அவன் மனதில் நினைக்கிறான்,

"என் கையிலிருக்கும்
இந்த மந்திரக் கோலுக்கு
மட்டும்வலிமை இருந்தால்,
என்றேனும் ,
என் இன்பங்களை சிறக்க வைக்குமோ?
என் துன்பங்களை மறக்க வைக்குமோ?
என்னை சிரிக்க வைக்குமோ?"

அழகாய் சிரிக்க வைப்பான்
ஆச்சரியம் உணர வைப்பான்.
ஆனால்,
அவனுக்கு எந்த மந்திரமும் பலித்ததில்லை!
அவன் கையிலிருந்த
மந்திரக் கோலால்!

© ❤நான் வாணி ❤