...

5 views

ராணிக்கொசு !!
வந்தது வரை லாபம் - என
விளக்கேற்ற

வந்தவள் எண்ணுகிறாள் !!

அதனால்,

யாருக்கும் வராத துன்பம்

எனக்கு மட்டும் வந்ததுவென -

கலங்குகிறேன் நான் !!

வாழ்க்கைத் துணையாகத் - தான் ,

தேர்ந்தது சரியென

தினமவள் மகிழ்கிறாள் !!

நானோ ,

தேர்வெழுதிய மாணவனாய் -

தினம் மனம்

பரிதவிக்கிறேன் !!


பச்சைப்பிள்ளைப் போல -அவள்

பார்த்ததை எல்லாம் கேட்கிறாள் !!

கடன் கொடுத்தவன்

கண்ணில் படாமல்

நான் ,

திருடனைப் போலப்
போகிறேன் !!

அவள், சத்தமாகவும்
சட்டமாகவும் பேசுகிறாள் !!

நான்,
கைகட்டி, வாய் பொத்தி அடிமைபோல வாழ்கிறேன் !!

ஏனென்றால்

நல்ல நேரம் போய் விட்டது !!

கெட்ட நேரம் வந்து விட்டது


© s lucas