...

24 views

என் கவிதையும் உன்னை காதலித்திருந்தால்...
என் கவிதையும் உன்னை
காதலித்திருந்தால்..

மறைத்து வைத்த மனதையும்
மௌனங்களையும்
வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும்...

தொடர்பற்று தொலைந்த
நம் இருபாதி கனவுகளை
கவிதைக்குள் கருவாக சுமந்திருக்கும்...

விழிசுமந்த ஈரங்களை மையிட்டு..
உயிர்மெய் எழுத்துகளில்
உயிர் கசிந்திருக்கும்....

புரிதலுக்கும்..
பிரிதலுக்குமான..
நம் பிரியங்களை
இணைத்து வைத்து..
ரசித்திருக்கும்...

பிரித்து வைத்து ரசித்திட..
படைத்த படைப்புகளின்
வரிசையில்..
உன்னையும் என்னையும்..
முதலும் முடிவுமாய்..
எழுதியிருக்கும்...

உன்னோடு விலகி நின்றாலும்
உனக்குள்ளே துடித்திருக்கும்..
இவளையே..
உன்னிதயமென பொருள்பட..
விலக்கியிருக்கும்...

பிரிந்தாலும் உன்னுள்
மறுநொடியே
பிரவேசிக்கும்
மூச்சுக்காற்றுக்கு..
இவள் பெயர் வைத்திருக்கும்..

இரண்டடியில் விலகிநின்று
இருபொருள் சொல்லித்தரும்..
இவளின் காதலையும்..
கஜல் கவிதைகளில்..
சேர்க்கச்சொல்லி...

இருவரியில் சொல்லியிருக்கும்..

என் முதலும் முடிவும் நீயென்று ..!


© sha💕jan