...

31 views

இனியும் இப்படித்தான் இருப்பேனோ..?

உதிர காத்திருக்கும்
எந்த குல்முகர் மரத்தின்
நிழல்களையும் நின்று ரசிப்பதேயில்லை....

சிறு தூரலோ..பெருமழையோ..
நனைந்து பார்க்க மனம் அழைப்பதேயில்லை...

ஆயிரம்முறை கேட்ட பாடல்களின்..
வரிகளை இப்போதெல்லாம்
கேட்க தோன்றுவதேயில்லை...

நீல நிற புடவைகள் இருக்கும்...
அடுக்கு பக்கம் என் பார்வை
திரும்புவதேயில்லை...

என்மாற்றங்களை கவனித்துக்கொண்டிருக்கும்
எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்...

உன்னைப் பற்றி எழுதும் கவிதைகள் முன்பை விட
தங்களை இன்னும் கூடுதலாய்..
மெருகேற்றி கொண்டிருப்பதனை

எந்தன் இப்புதிய திருத்தம்
எனக்கே புதிதாய் இருங்க..

இனியும் நான் இப்படித்தான் இருப்பேனோ...!



© sha💕jan