...

7 views

கண்ணீரின்றி கரைசேர இயலுமா...
நீரூறும் கண்கள்,
நெருப்பாகும் நெஞ்சம்,
எழுத்துக்களால் மடை கட்டினேன்,
கரைய துவங்கியது;
வார்த்தைகளை வாக்கியங்களாக்கி
அணைக்கட்டினேன்,
கரைபுரண்ட வெள்ளம் போல் ஆர்ப்பரித்து
அடித்துச் செல்லப்பட்டது;

காலங்கள் மாறியபோதும்
காயங்கள் ஆறியதில்லை;
காலத்தின் கணக்கு தான் என்ன!
கண்ணீரின் முடிவு தான் என்ன!

காலக்கடலில் இறங்கியவன்
கண்ணீரின்றி
கரைசேர இயலுமா !

❤️ ரோகிணிஜெயராம்