...

11 views

நகரம் ஒரு வனத்தின் முத்தம்
நீ நகரம்
அதில்தான் இருக்கிறது
உனக்குள் பெய்த காடு.

திக்குகள் மொக்கவிழ்க்க
நான் ஒழுங்கற்று
கண்டும் கவியற்று
சுற்றும் மின்மினி.

உன் ஸ்வப்னங்கள்
இரவில் பரவும் மின்னல்.

நான் ஒலித்த இடியில்
வழித்த முழக்கத்தின் கரு.

கண்களில் குளிர் நிரம்ப
காதலை பூக்க வைத்தாய்.

பருவங்கள் நிறம் சிலிர்க்க
உன் காடு மலர்ந்தது
மகரந்தப்புயலில்...

நான் வேர்களில் தயங்கும்
அருவியின் வியர்வை.
நீ நகங்களில் ஏந்தினாய்
என் பாலையை...

உன் ஸ்வாசத்தில் கடைந்த
வாசனை தென்றல்
எரித்தன மழலைச்சூட்டில்
பாழ் நிலத்தை பிணி அகல.

சாம்பலற்று வீழ்கிறேன்
நான் ஃபீனிக்ஸின்
முதல் கூவலின் ஸ்வரமாய்...

நீ காடு.
நீ உண்ட விண் நான்.
நம்மை பிணைத்தது
காதலில் தளிர்த்த வானவில்.
ஒளிரட்டும் சகியே...

அலம்பிய புத்தகமாய்
நம்மிருவர் வாழ்வும்
தந்தத்துப்பாதையில்
வண்ணங்களாய் பாய்ந்திட...

© sparisan