...

7 views

மரணம் ஏது இங்கு
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் நரகமாய் மாறியது
நேற்று நடந்தது ஒன்று
நாளை நடக்க இருப்பது ஒன்று
இரண்டின் வியப்பில் மறந்தேன்
நான் வாழ்ந்துகொண்டிருப்பது இன்று என்று
ஒரு நாள் ஆயுளுடைய ஈசலை பார்த்து வியந்தேன்
அதன் மரணம் இன்று என அறிந்தும் அது மகிழ்ச்சியுடன் பறந்து கொண்டிருந்தது
அனால் நானோ என் மரணம் எப்பொழுது என்று தெரியாமலே
நாளை நடக்க இருப்பதை எண்ணி
இன்றைய என் நாளை தொலைத்தேன்
சரித்திரம் ஆயிரம் கூறியது
அனால் சரித்திரத்தை படைத்தவனோ
அவன் சரித்திரத்தையே மாற்றி நின்றான்
பயத்தை அணுகியவன் மரணிக்கிறான்
பயத்தை விற்றவன் மரணத்திற்கு சவால் விடுகிறான்.