...

4 views

அவளின் கூந்தல்
நான் கவிதைகள் சொல்ல சொல்ல, உன் கூந்தலின் அழகு கூடிக் கொண்டே போகிறது.
அதை தினமும் காண இயலவில்லை என்று மனம் தான் நோகிறது.
உன் கூந்தலழகை பார்க்கும் போது, எழுத தோன்றும் கவிதைகள் லட்சமடி.
நீ என்னை கடந்து சென்ற பிறகு, உடல் மட்டுமே மிச்சமடி.
உன் கூந்தல் நிறத்தை கண்டு, பொறாமை கொள்ளும் காகம்.
உன்னால் நெஞ்சமெல்லாம் காதல் என்னும் மோகம்.
மேகத்திற்கு கூந்தலால் கருமையை தீட்டிய கார்மேகமே!
உன்னை நோக்கி தான் நகர்கிறது இந்த காதல்மேகமே! ❤️
© Anbazhakan S