4 views
அன்றைய புலரும் பொழுது
தேடல் தொடங்க பாதங்கள் தூரமறியா நடக்க ஆதவனும் துணையிருக்க காற்றும் சுற்றிக்கொண்டே நானும் இருக்கிறேன் உணர்த்த
ஊடல் இல்லா மலர்கள் பகலவனின் பார்வையில் பாங்காய் விரிந்து சிரிக்க சிந்தனையோடு சிதறும் பனியும்
புல்லின் நுனியில் நூல் போல் பின்னப்பட்ட வலையில் நடுவில் அமர்ந்து விடியல் ரசிக்கும் சிறு பூச்சியும்
அருகருகே அடர்த்தி மிக்க மரங்களையும் பொலு பொலுவென உதிர்ந்த காய்ந்த சருகுகளும்
மொழு மொழு வளர்ந்த
ஈரஇலைகளும்
மெல்லிசை படிக்க புள்ளினங்களும்
புது மெட்டில் துயில் கொள்ளும் அழகிய வானவனிடம் ரகசியம் உரைத்து விட்டு உரக்க பறக்கிறது
மூண்டு திரண்ட முகில் கூட்டங்கள் ஆங்காங்கே கூடி கொழுவீற்று அதிகாலை பொழுதில் பொன்னொளியில்
மிளிர்கிறாள் 🤍
© Ash(ஈசன் )
ஊடல் இல்லா மலர்கள் பகலவனின் பார்வையில் பாங்காய் விரிந்து சிரிக்க சிந்தனையோடு சிதறும் பனியும்
புல்லின் நுனியில் நூல் போல் பின்னப்பட்ட வலையில் நடுவில் அமர்ந்து விடியல் ரசிக்கும் சிறு பூச்சியும்
அருகருகே அடர்த்தி மிக்க மரங்களையும் பொலு பொலுவென உதிர்ந்த காய்ந்த சருகுகளும்
மொழு மொழு வளர்ந்த
ஈரஇலைகளும்
மெல்லிசை படிக்க புள்ளினங்களும்
புது மெட்டில் துயில் கொள்ளும் அழகிய வானவனிடம் ரகசியம் உரைத்து விட்டு உரக்க பறக்கிறது
மூண்டு திரண்ட முகில் கூட்டங்கள் ஆங்காங்கே கூடி கொழுவீற்று அதிகாலை பொழுதில் பொன்னொளியில்
மிளிர்கிறாள் 🤍
© Ash(ஈசன் )
Related Stories
7 Likes
0
Comments
7 Likes
0
Comments