...

7 views

தாலாட்டு
அழகிய அருவி தான் ஓடாமல் ஓய்வெடுக்குதே.

ஆராரோ ஆரிராரோ அன்னைமடி நீ தூங்கு.

இனிய குழலிசை இசையாமல் இருக்குதே.

ஈத்தேன்போல் இனிமையான அன்னைமடி நீ தூங்கு.

உலாவரும் தேரின்று ஓரமாய் நிற்குதே.

ஊழ்கம்போல் அமைதியாய் அன்னைமடி நீ தூங்கு.

எழில்மிகு மயிலொன்று எளிமையாய் நடக்கிறதே.

ஏகாந்த தொட்டிலெனும் அன்னைமடி நீ தூங்கு.

ஐயானனத் தலைவி இன்று அடங்கிபோய் கிடக்குதே.

ஒப்பில்லா மஞ்சமெனும் அன்னைமடி நீ தூங்கு.

ஓடதிபதி ஒளிக்கீற்று ஓய்ந்துபோய் இருக்குதே.

ஔவையின் ஆசிபெற்ற அன்னைமடி நீ தூங்கு.

Goodnight and getwell tomorrow.
© gowieeie