...

9 views

அவளும் நானும் ஒரு கவிதைக்குள்
நேற்று இரவும் அவள்
பேசியபடி போய் விட்டாள்.

அவளோடு நான்
கொஞ்ச நேரம் பேசியபடி
கொஞ்சும் நேரம் வரவே
காத்திருப்பேன்.

லாவகமாய் அவள்
போய் விடுவாள்.

பின்னிரவு நகராது
பேதமுற்ற பேதை போல்
குளிரில் தத்தளிக்கும்.

இரண்டு குடுவை
நீர் பருகி அதையும்
ஒரே முறையில்
செலவழித்தும் விடுவேன்.

உடனே தூங்கி விடுவேன்
என்று சொல்வாள்.

ஒரு பெண்ணின்
அழகான பொய்யில்
இதுதான் முதன்மையானது.


© sparisan