...

1 views

வாழ்ந்தால் என்ன....
வாழ்வதற்குத்தானே அத்தனை
போராட்டங்களும்

ஏதோ ஒரு நம்பிக்கையை
பற்றிக்கொண்டு
ஏதோ ஒரு நேசத்தினை
சுமந்துகொண்டு
உயிரோடு இருப்பதற்குத்தானே
எல்லா ஜீவன்களும்
போராடிக்கொண்டிருக்கின்றன

தனிமையில் இருந்து
சிந்தித்துப்பார்த்தால் நம்
வலிகள் பெரிதாகத்தெரியலாம்
ஆனால் ஏங்காவது ஒரு தொலைவில்
எங்காவது நாம் அறியாத
ஒரு இடத்தில் நம்மை விட
வலிகளையும் வேதனைகளையும்
சுமந்தபடி இந்த வாழ்க்கையினை
வாழ்வதற்கு யாராவது
போராடிக்கொண்டிருக்கலாம்
ஏன் அதில் ஜெயித்தும்
கூட இருக்கலாம்

ஒவ்வொரு முறையும் நம்பிக்கையும்
தைரியமும்
இழந்து அமரும்போதெல்லாம்
அப்படியானவர்களைத்தான்
நினைத்துக்கொள்வேன்

ஏதோ அவர்களே நேரில் வந்து
உன்னால் மட்டும் ஏன்
முடியாது என்று கேட்பதுபோலவே
இருக்கும்

பலமுறை மரணத்தின்
வாசனைவரை சென்று நுகராமல்
திரும்பிவர வைத்திருக்கின்றன
அவர்களின் வாழ்வின்
போராட்டங்கள்.

#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran