...

7 views

சோதனை
இந்தக்கடவுள்..

இப்பொழுதெல்லாம்
என்னை விட்டு
அகல்வதேயில்லை.

அச்சத்தில் நடுங்கி
கைகளை பற்றியவாறே
மனம் பதறித்துடித்து
பின்தொடர்ந்து வருகிறான்.

உணவும் நீரும் வழங்கினாலும்
பறிகொடுத்த உணர்வை
அவன் விடுவதேயில்லை.

திண்ணையில் தெருவில்
மொட்டைமாடியில் சந்துக்களில்
நான் இருக்கும்போதெல்லாம்
பின்நிழலாய் தொடர்கிறான்.

கோவில் பக்கம் போனால்
அஞ்சி நடுங்குகிறான்.
தூக்கத்தில் உளறி
என்னையும் எழுப்புகிறான்.

வான் பார்ப்பதை தவிர்த்து
குனிந்த தலையுடன் அழுகிறான்.

அவன் விருப்பப்படி
எது வேண்டுமோ
அதை செய்ய
என்னால் முடியும்.

அவனோ சற்றும்
இரக்கமின்றி...

என்னிடம் எப்போதும்
ஒரு மனிதனை
காட்டு என்கிறான்.

எங்கே சென்று
மனிதனை நான் தேட..?

© sparisan