...

10 views

மனம் எனும் நந்தவனம்
மனம் எனும் நந்தவனம்

ஆசை ஆசையாய்
நான் வளர்த்தேன்
அன்பெனும் செடியை
உன்மேலுள்ள
காதலை தினம்
தினம் ஊற்றி……!!!!

இன்று அது
மரமாகி பூத்துக்
குலுங்குகிறது…
!!!

பல வண்ண
மலர்களை தினம்
எனக்குத் தருகிறது…!!

அதில் தான் எத்தனை
வாசம்.. எத்தனை நேசம்….
!!

தினம் ஒரு விதமாய்
உன் அன்பை சொல்லும்
விதமாய் பூக்கிறது….

அன்பாய்… ஆசையாய்
நேசமாய்… பாசமாய்….
!!!
உன் மேலுள்ள
காதலை சொல்லிச்
செல்கிறது…..
!!!


என் மனம் எனும்
நந்தவனத்தில்
நித்தம் நீயே
பல வண்ண
மலர்களாய்
பூத்துக்
குலுங்குகிறாய்…..!!!🌹🌹🌹